பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கைத் துவக்கினார். தற்போது 20 லட்சம் பாலோயர்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா, சில பிரபலங்களை மட்டுமே அவரது கணக்கில் பின் தொடர்கிறார்.
அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன், மலையாள நடிகைகளான அபர்ணா பாலமுரளி, பார்வதி, தமிழ் நடிகையான சமந்தா, நிஹரிகா, பாலிவுட் நடிகைகளான கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோனே, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ், ஹிந்தி நடிகர் ஷாரூக்கான், இசையமைப்பாளர் அனிருத், பிரபல பெண் யூடியூபர் நிஹரிகா, அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உள்ளிட்ட 20 பேரை மட்டுமே பின் தொடர்கிறார்.
மேலும், இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கிய பிறகு 'ஜவான்' படத்தைப் பற்றிய பதிவுகளை மட்டுமே பதிவிட்டுள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள 'இறைவன்' படத்தின் அப்டேட்டுகளைக் கூடப் பதிவிடவில்லை. சீக்கிரத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ள தமிழ் நடிகை என்ற சாதனையை நயன்தாரா பெறவும் வாய்ப்புகள் உண்டு.




