வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கைத் துவக்கினார். தற்போது 20 லட்சம் பாலோயர்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா, சில பிரபலங்களை மட்டுமே அவரது கணக்கில் பின் தொடர்கிறார்.
அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன், மலையாள நடிகைகளான அபர்ணா பாலமுரளி, பார்வதி, தமிழ் நடிகையான சமந்தா, நிஹரிகா, பாலிவுட் நடிகைகளான கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோனே, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ், ஹிந்தி நடிகர் ஷாரூக்கான், இசையமைப்பாளர் அனிருத், பிரபல பெண் யூடியூபர் நிஹரிகா, அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உள்ளிட்ட 20 பேரை மட்டுமே பின் தொடர்கிறார்.
மேலும், இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கிய பிறகு 'ஜவான்' படத்தைப் பற்றிய பதிவுகளை மட்டுமே பதிவிட்டுள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள 'இறைவன்' படத்தின் அப்டேட்டுகளைக் கூடப் பதிவிடவில்லை. சீக்கிரத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ள தமிழ் நடிகை என்ற சாதனையை நயன்தாரா பெறவும் வாய்ப்புகள் உண்டு.