லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் இரண்டு பெரிய ஹீரோக்கள் இணைந்து நடிப்பதை போன்று இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ஒரே படத்தை தயாரிக்கும் டிரண்ட் எப்போதோ வந்து விட்டது. தற்போது தமிழ் சினிமாவிலும் அது தொடங்கி உள்ளது.
தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இன்வேனியோ பிலிமிஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நான்கு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'கண்ணிவெடி' (தமிழ்), ராஷ்மிகா நடிக்கும் 'ரெயின்போ' (தெலுங்கு) திரைப்படங்களை இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கவுள்ளன. மற்ற இரு படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
இதுகுறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரபு கூறும்போது "இந்த புதிய பயணம் உற்சாகத்தைத் தருகிறது. இரண்டு நிறுவனங்களின் தனித்துவ சிறப்புகளும் எங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கும். எல்லைகள் தாண்டி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் நாங்கள் சொல்லப்போகும் கதைகள் வெள்ளித் திரையை உயிர்ப்பிக்கும்" என்றார்.