'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் இரண்டு பெரிய ஹீரோக்கள் இணைந்து நடிப்பதை போன்று இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ஒரே படத்தை தயாரிக்கும் டிரண்ட் எப்போதோ வந்து விட்டது. தற்போது தமிழ் சினிமாவிலும் அது தொடங்கி உள்ளது.
தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இன்வேனியோ பிலிமிஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நான்கு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'கண்ணிவெடி' (தமிழ்), ராஷ்மிகா நடிக்கும் 'ரெயின்போ' (தெலுங்கு) திரைப்படங்களை இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கவுள்ளன. மற்ற இரு படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
இதுகுறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரபு கூறும்போது "இந்த புதிய பயணம் உற்சாகத்தைத் தருகிறது. இரண்டு நிறுவனங்களின் தனித்துவ சிறப்புகளும் எங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கும். எல்லைகள் தாண்டி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் நாங்கள் சொல்லப்போகும் கதைகள் வெள்ளித் திரையை உயிர்ப்பிக்கும்" என்றார்.