மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஜோஜு ஜார்ஜ். தமிழில் 'ஜெகமே தந்திரம்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அவர் 'ஆண்டனி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் புரமோசனுக்காக படக் குழுவினருடன் லண்டன் சென்றார். அவருடன் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் செம்பன் வினோத் உள்ளிட்ட படக் குழுவினரும் சென்றிருந்தனர்.
புரமோசன் நிகழ்வு முடிந்தவுடன் ஜோஜு ஜார்ஜ் ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது அவரது பாஸ்போர்ட் மற்றும் அவரது பையில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதனால் என்ன செய்வது என்று தவித்தார் ஜோஜு ஜார்ஜ். படத் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு உடனடியாக பணத்தை வழங்கியது. இதுதொடர்பாக லண்டனின் உள்ள இந்திய தூதரகத்தில் ஜோஜு ஜார்ஜ் புகார் அளித்தார். அவர் நாடு திரும்புவதற்காக தற்காலிக பாஸ்போர்ட்டை தூதரகம் வழங்கியது. படக் குழுவினரில் மேலும் இருவரின் பாஸ்போட்டும் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.