கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் மகேஷ்பாபு. பிரபல சீனியர் ஹீரோவான மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மகனான இவருக்கு மஞ்சுளா என்கிற சகோதரியும் உண்டு. மகேஷ்பாபு கதாநாயகனாக அறிமுகமாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே மலையாளத்தில் சிபிமலயில் இயக்கத்தில் வெளியான சம்மர் இன் பெத்லகேம் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் மஞ்சுளா.
தமிழில் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் சரத்குமார், விஜயசாந்தி நடித்த ராஜஸ்தான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் நடிப்பை விட்டு ஒதுங்கிக் சினிமா தயாரிப்பு, பிசினஸ் என ரூட்டை மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் தான் நடிப்பை விட்டு ஒதுங்கியதற்கான காரணத்தையும் ஆதலால் பட்ட மன அழுத்தத்தையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மஞ்சுளா.
இது பற்றி அவர் கூறும்போது, “எனக்கு ஒரு நடிகையாக வேண்டும் என்கிற கனவு இருந்தது. ஆனால் ஒரு சில படங்களில் நடித்ததுமே நான் நடிப்பதற்கு என் தந்தை கிருஷ்ணாவின் ரசிகர்களிடம் இருந்து பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் என்னை ஒரு நடிகையாக பார்க்க விரும்பவில்லை. அதுமட்டுமல்ல எனது உறவினர்கள் கூட இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து மிகப்பெரிய மன அழுத்தத்திற்கும் ஆளானேன். அதன்பிறகு யோகாவில் தீவிர கவனம் செலுத்தி மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்து பின்பு பிசினஸில் இறங்கினேன்” என்று கூறியுள்ளார்.