ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் 'தக் லைப்'!! | கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஜோஜு ஜார்ஜ். தமிழில் 'ஜெகமே தந்திரம்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அவர் 'ஆண்டனி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் புரமோசனுக்காக படக் குழுவினருடன் லண்டன் சென்றார். அவருடன் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் செம்பன் வினோத் உள்ளிட்ட படக் குழுவினரும் சென்றிருந்தனர்.
புரமோசன் நிகழ்வு முடிந்தவுடன் ஜோஜு ஜார்ஜ் ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது அவரது பாஸ்போர்ட் மற்றும் அவரது பையில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதனால் என்ன செய்வது என்று தவித்தார் ஜோஜு ஜார்ஜ். படத் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு உடனடியாக பணத்தை வழங்கியது. இதுதொடர்பாக லண்டனின் உள்ள இந்திய தூதரகத்தில் ஜோஜு ஜார்ஜ் புகார் அளித்தார். அவர் நாடு திரும்புவதற்காக தற்காலிக பாஸ்போர்ட்டை தூதரகம் வழங்கியது. படக் குழுவினரில் மேலும் இருவரின் பாஸ்போட்டும் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.