லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா சினிமா விழாக்களில் கலந்து கொள்வதை அதிகம் தவிர்ப்பவர். அவர் நடிக்கும் படங்களுக்குக் கூட புரமோஷன்களுக்கு வரமாட்டார். நேற்று சென்னையில் நடந்த 'ஜவான்' நிகழ்வில் கூட நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. கேரளாவில் குடும்பத்தினருடன் ஓணம் கொண்டாடியதால் அவரால் வர முடியவில்லை என்று இயக்குனர் அட்லீ தெரிவித்திருந்தார்.
இதுவரையில் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லாத நயன்தாரா தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கை ஆரம்பித்து அறிமுகமாகியுள்ளார். தனது முதல் பதிவாக தனது இரட்டைக் குழந்தைகளான உயிர், உலக் ஆகியோருடன் இருக்கும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். 'ஜெயிலர்' படப் பாடலுடன் இடம் பெற்றுள்ள அந்தப் பதிவில், “நான் வந்துட்டேன்னு சொல்லு….' எனக் குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாராவின் இந்த திடீர் மாற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. விரைவில் அதிக பாலோயர்களை நயன்தாரா பெறுவார் என எதிர்பார்க்கலாம்.