நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா சினிமா விழாக்களில் கலந்து கொள்வதை அதிகம் தவிர்ப்பவர். அவர் நடிக்கும் படங்களுக்குக் கூட புரமோஷன்களுக்கு வரமாட்டார். நேற்று சென்னையில் நடந்த 'ஜவான்' நிகழ்வில் கூட நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. கேரளாவில் குடும்பத்தினருடன் ஓணம் கொண்டாடியதால் அவரால் வர முடியவில்லை என்று இயக்குனர் அட்லீ தெரிவித்திருந்தார்.
இதுவரையில் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லாத நயன்தாரா தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கை ஆரம்பித்து அறிமுகமாகியுள்ளார். தனது முதல் பதிவாக தனது இரட்டைக் குழந்தைகளான உயிர், உலக் ஆகியோருடன் இருக்கும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். 'ஜெயிலர்' படப் பாடலுடன் இடம் பெற்றுள்ள அந்தப் பதிவில், “நான் வந்துட்டேன்னு சொல்லு….' எனக் குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாராவின் இந்த திடீர் மாற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. விரைவில் அதிக பாலோயர்களை நயன்தாரா பெறுவார் என எதிர்பார்க்கலாம்.