ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, அபிநயா, சுனில், செல்வராகவன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் விநாயகர் சதுர்த்தி வெளியீடு என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு மார்க் ஆண்டனி படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அந்த போஸ்டரில், இந்த படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டைம் டிராவல் கதையில் உருவாகியுள்ள இந்த படம் சினிமாவுக்கு புதிது என்பதால் கண்டிப்பாக ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெரும் என்றும் அப்படக்குழு தெரிவித்துள்ளது.