மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் அசோக் செல்வன். ‛‛தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில்'' என கவனிக்கத்தக்க படங்களில் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளான, நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் காதலித்து வந்ததாகவும், இவர்களின் காதலுக்கு இருவரது வீட்டிலும் சம்மதம் சொல்லியதை அடுத்து வரும் செப்., 13ல் திருநெல்வேலி மாவட்டத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தும்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன், அதன்பின் அன்பிற்கினியாள் படத்தில் நாயகியாக நடித்தார். தற்போது கொஞ்சம் பேசினால் என்ன என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.