மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், சமீபத்தில் கர்நாடகா மாநிலம் சிவ மொக்காவில் உள்ள ஒரு கல்லூரியில், தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். ஆனால் கல்லூரிக்கு தொடர்பில்லாத தனியார் நிகழ்ச்சியை எப்படி கல்லூரி வளாக்கத்திற்குள் நடத்தலாம் என்று அதற்கு எதிராக அந்த கல்லூரியை சேர்ந்த சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதோடு நடிகர் பிரகாஷ்ராஜ் கல்லூரிக்கு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
ஆனபோதிலும் மாணவர்களின் எதிர்ப்பை மீறி இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி முடிந்து பிரகாஷ்ராஜ் அங்கிருந்து வெளியேறியதும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மாணவர்கள், அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கோமியத்தை கொண்டு வந்து தெளித்து சுத்தம் செய்து உள்ளார்கள். அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.