டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

'பருத்திவீரன்' படத்தில் அறிமுகமான கார்த்தி, தற்போது தனது 25வது படமான ஜப்பானில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கார்த்தி நடித்து வரும் படங்கள், நடிக்க இருக்கும் படங்கள் பற்றிய அப்டேட்டை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நடிகர் கார்த்தி தற்போது மூன்று டங்களில் இரவு பகலாக உழைத்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இயக்குநர் ராஜு முருகன், இயக்கி வருகிறார். அடுத்து நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பில் ஆகஸ்ட் மாதம் கார்த்தி கலந்து கொள்ளவிருக்கிறார்.
கார்த்தியின் 27வது படத்தை பிரேம் குமார் இயக்குகிறார். அரவிந்த்சாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கார்த்தியின் படங்கள் வெளியீட்டுக்கு முன்னரே 150 கோடி ரூபாய் வசூலிக்கும் நிலையை அடைந்திருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




