படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கர், ஒரு இயக்குனராக 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர் தற்போது தெலுங்கில் ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. 2024ல் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் திரையுலகில் 30 ஆண்டுகளைக் கடந்தது குறித்து 'கேம் சேஞ்சர்' படத்தின் நாயகன் ராம் சரண், “இந்தியத் திரையுலகில் நிஜமான கேம் சேஞ்சர். அற்புதமான 30 ஆண்டுகளைக் கடந்ததற்கு வாழ்த்துகள் சார். உங்களுக்காகக் இன்னும் முன்மாதிரியான பணிகளும், பாராட்டுக்களும் காத்திருக்கின்றன,” என்று வாழ்த்தியுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஷங்கர், “உங்கள் இனிமையான வாழ்த்துகளுக்கு நன்றி ராம். 'கேம் சேஞ்சர்', ஆகஸ்ட் மாதத்தில் நமது அடுத்த கட்ட நகர்வுக்காக காத்திருக்க முடியவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டம் என்பது படத்தின் முதல் சிங்கிள் வெளியீடா அல்லது டீசர் வெளியீடா, அல்லது அடுத்த கட்ட படப்பிடிப்பா என தெலுங்கு ரசிகர்கள் ஷங்கரின் அப்டேட்டிற்குக் கொஞ்சம் குழம்பிப் போய் உள்ளனர்.