துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
சமீபத்தில் ஓடிடியில் வெளியான தமிழ் வெப் தொடர் 'ஸ்வீட் காரம் காபி'. பாட்டி லட்சுமி, அம்மா மதுபாலா ஆகியோருடன் பேத்தி சாந்தி பாலச்சந்திரன் சென்னையில் இருந்து கோவாவிற்கு காரில் தனியாக பயணம் செய்வது மாதிரியான கதை. மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு படத்தின் மூலம் புகழ்பெற்ற சாந்தி பாலச்சந்திரன் அதன்பிறகு பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இந்த தொடரின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
தொடரில் நடித்திருப்பது பற்றி சாந்தி கூறும்போது "இந்த தொடர் பாட்டி, அம்மா, பேத்தி ஆகியோர் குடும்ப கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக ஒரு பயணம் மேற்கொள்வது மாதிரியான கதை. இதில் பாட்டியாக நடிக்க லட்சுமியையும், அம்மாவாக நடிக்க மதுபாலாவையும் தேர்வு செய்து விட்டார்கள். பேத்தியாக நடிக்க அவர்களின் முகசாயலில் உள்ள ஒருவரை தயாரிப்பாளர் ரேஷ்மா கட்டாலாவும், இயக்குநர் பிஜாய் நம்பியாரும் பலமொழிகளிலிருந்து என் வயதுடைய நடிகர்களைத் தேடி இருக்கிறார்கள். இறுதியாக, நான் பொருத்தமாக இருப்பேன் என்று முடிவு செய்து என்னை நடிக்க வைத்தார்கள். இதன் மூலம் தமிழுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.