மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? |
சமீபத்தில் ஓடிடியில் வெளியான தமிழ் வெப் தொடர் 'ஸ்வீட் காரம் காபி'. பாட்டி லட்சுமி, அம்மா மதுபாலா ஆகியோருடன் பேத்தி சாந்தி பாலச்சந்திரன் சென்னையில் இருந்து கோவாவிற்கு காரில் தனியாக பயணம் செய்வது மாதிரியான கதை. மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு படத்தின் மூலம் புகழ்பெற்ற சாந்தி பாலச்சந்திரன் அதன்பிறகு பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இந்த தொடரின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
தொடரில் நடித்திருப்பது பற்றி சாந்தி கூறும்போது "இந்த தொடர் பாட்டி, அம்மா, பேத்தி ஆகியோர் குடும்ப கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக ஒரு பயணம் மேற்கொள்வது மாதிரியான கதை. இதில் பாட்டியாக நடிக்க லட்சுமியையும், அம்மாவாக நடிக்க மதுபாலாவையும் தேர்வு செய்து விட்டார்கள். பேத்தியாக நடிக்க அவர்களின் முகசாயலில் உள்ள ஒருவரை தயாரிப்பாளர் ரேஷ்மா கட்டாலாவும், இயக்குநர் பிஜாய் நம்பியாரும் பலமொழிகளிலிருந்து என் வயதுடைய நடிகர்களைத் தேடி இருக்கிறார்கள். இறுதியாக, நான் பொருத்தமாக இருப்பேன் என்று முடிவு செய்து என்னை நடிக்க வைத்தார்கள். இதன் மூலம் தமிழுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.