பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு |
சமீபத்தில் மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த படம் 2018 . உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வெளிவந்த இப்படம் மலையாள சினிமாவின் அதிக வசூல் செய்த படமாக மாறி சாதனை செய்தது. இதையடுத்து மலையாளத்தில் நடிகர் ஆசிப் அலியை வைத்து விரைவில் புதிய படத்தை இவர் இயக்கவுள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழில் லைக்கா தயாரிப்பில் ஒரு புதிய படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இதில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நிவின் பாலி ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இதில் ஹீரோவாக நடிக்க விக்ரம் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.