எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கடந்த வருடத்திற்கான கேரளா அரசின் 53வது திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் சிறந்த நடிகருக்கான விருது மம்முட்டிக்கும் சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் ஜூரி விருது நடிகர் குஞ்சாக்கோ போபனுக்கும் கிடைத்துள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருது 'அறியிப்பு' என்கிற படத்தை இயக்கியதற்காக இயக்குனர் மகேஷ் நாராயணனுக்கு கிடைத்துள்ளது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இவர் கடந்த 2021ல் பகத் பாசிலை வைத்து இயக்கிய ‛சி யூ சூன்' என்கிற படத்திற்கும் 2022ல் வெளியான நாயாட்டு என்கிற படத்திற்கும் சிறந்த படத்தொகுப்பாளருக்கான கேரளா அரசின் விருதை தொடர்ந்து பெற்று வந்துள்ளார். அந்த வகையில் இந்த வருடம் கிடைத்த விருதின் மூலம் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார் மகேஷ் நாராயணன்.
இவர் இயக்குனர் ஆவதற்கு முன்பு கமல் நடித்த விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் டேக் ஆப், வைரஸ், மாலிக் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். இந்த விருது கிடைத்தது பற்றி மகேஷ் நாராயணன் கூறும்போது, “எனது படத்திற்கு ஏதோ ஒரு விருது கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் சிறந்த இயக்குனருக்கான விருது கிடைக்கும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.