இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மகேஷ்பாபு நடிப்பில் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் படம் குண்டூர் காரம். இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மகேஷ்பாபுவின் குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த சோக நிகழ்வுகளால் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. இடையில் படப்பிடிப்பு துவங்கி கடந்த மாதம் இந்த படத்திற்கு ‛குண்டூர் காரம்' என்கிற டைட்டிலும் வைக்கப்பட்டது. ஆனாலும் டைட்டில் ஏற்படுத்திய பரபரப்பை விட மீண்டும் இந்த படத்தில் இருந்து பல சர்ச்சையான விஷயங்கள் தொடர்ந்து மீடியாவில் இடம் பிடித்து வருகின்றன. இந்த படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருந்த நடிகை பூஜா ஹெக்டே, இந்த படத்தின் படப்பிடிப்பு ஷெட்யூல் அடிக்கடி மாற்றப்பட்டதால் மற்ற படங்களில் நடிப்பதற்கு சிக்கல் ஏற்படுவதாக கூறி சமீபத்தில் இந்த படத்தில் இருந்து விலகினார்.
இசையமைப்பாளர் தமன் கூட இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த செய்தியில் உண்மை இல்லை என தமன் சமீபத்தில் மறுத்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் பி.எஸ் வினோத், சில காரணங்களால் தற்போது வெளியேறிவிட்டார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
இத்தனைக்கும் கடந்த ஐந்து வருடங்களாக திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் நட்பு கூட்டணியில் இருந்து வருபவர் தான் பி.எஸ் வினோத். அரவிந்த சமேத வீரராகவா மற்றும் ஆல வைகுண்டபுரம் லோ ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த நிலையில் படப்பிடிப்பு தேதிகள் மட்டும் ஸ்கிரிப்டில் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதாலேயே ஒளிப்பதிவாளர் பிஎஸ் வினோத் வெளியேறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.