அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? |
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன். இவர் தற்போது ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கியிருக்கிறார். அதோடு பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், அதில் விட்டதை இந்த ஜெயிலரில் பிடித்து விட வேண்டும் என்று ஒரு அதிரடியான கதையுடன் களம் இறங்கி இருக்கிறார் நெல்சன். இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் கதை குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது, இந்த படத்தில் சிலை கடத்தலை மையமாக கொண்ட கதையை திரைக்கதை அமைத்திருக்கிறார் நெல்சன். சிலை கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய புள்ளி ரஜினி ஜெயிலராக இருக்கும் சிறையில் அடைக்கப்படுகிறார். அதையடுத்து அவனை மீட்பதற்காக ஒரு கும்பல் களமிறங்குகிறது. அப்போது ரஜினிக்கும், அவர்களுக்கும் இடையே நடப்பது தான் இந்த ஜெயிலர் படத்தின் கதைக்களம் என்று கூறப்படுகிறது.