கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன். இவர் தற்போது ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கியிருக்கிறார். அதோடு பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், அதில் விட்டதை இந்த ஜெயிலரில் பிடித்து விட வேண்டும் என்று ஒரு அதிரடியான கதையுடன் களம் இறங்கி இருக்கிறார் நெல்சன். இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் கதை குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது, இந்த படத்தில் சிலை கடத்தலை மையமாக கொண்ட கதையை திரைக்கதை அமைத்திருக்கிறார் நெல்சன். சிலை கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய புள்ளி ரஜினி ஜெயிலராக இருக்கும் சிறையில் அடைக்கப்படுகிறார். அதையடுத்து அவனை மீட்பதற்காக ஒரு கும்பல் களமிறங்குகிறது. அப்போது ரஜினிக்கும், அவர்களுக்கும் இடையே நடப்பது தான் இந்த ஜெயிலர் படத்தின் கதைக்களம் என்று கூறப்படுகிறது.




