‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! |
பேட்ட, மாஸ்டர் படங்களுக்கு பின் விக்ரமுடன் ‛தங்கலான்' படத்தில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கேஜிஎப் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் வித்தியாசமான வேடத்தில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களையும், சில கலை நயமான போட்டோஷூட் படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது பாரம்பரிய உடையும், அதற்கு ஏற்ற ஆபரணங்கள் அணிந்தும் கலை நயத்தை வெளிப்படுத்தும் விதமாக போட்டோஷூட் எடுத்துள்ளார் மாளவிகா. அந்த போட்டோக்களை பகிர்ந்து, “நம் சமூகத்தில் என்னைத் தாக்குவது என்னவென்றால் கலை என்பது பொருள்களுடன் மட்டுமே தொடர்புடையதாக மாறிவிட்டது. தனிப்பட்ட நபர்களோ அல்லது வாழ்க்கையோ அல்ல. கலை என்பது சிறப்பு வாய்ந்த அல்லது கலைஞர்களான நிபுணர்களால் செய்யப்படும் ஒன்று. ஆனால் எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு கலைப் படைப்பாக மாறுவதில்லை? கலைப் பொருளாக விளக்கு அல்லது வீடு ஏன் இருக்க வேண்டும். ஏன் நம் வாழ்க்கை அப்படி இருப்பதல்ல?'' என குறிப்பிட்டுள்ளார்.