மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

இந்தியன் 2 உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் கைவசம் உள்ள படங்களில் நடித்த முடித்த பிறகு நடிப்புக்கு சில காலம் காஜல் அகர்வால் முழுக்குப்போட போவதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. ஆனால் அதை உடனடியாக மறுத்த காஜல் அகர்வால், தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் தான் ஒரு சிவபெருமானின் தீவிரமான பக்தை என்று கூறியிருக்கிறார். அதன் காரணமாகவே என் மகனுக்கு சிவபெருமானின் பெயரை சூட்டினேன். அதாவது சிவபெருமானின் மற்றொரு பெயர் நீலகண்டன். அதில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களை தேர்வு செய்து, நீல் என்று என் மகனுக்கு பெயர் சூட்டினேன் என்று தனது மகனின் பெயருக்குள் மறைந்திருக்கும் நீலகண்டனை வெளிச்சம் போட்டுள்ளார் காஜல் அகர்வால்.




