மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
இந்தியன் 2 உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் கைவசம் உள்ள படங்களில் நடித்த முடித்த பிறகு நடிப்புக்கு சில காலம் காஜல் அகர்வால் முழுக்குப்போட போவதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. ஆனால் அதை உடனடியாக மறுத்த காஜல் அகர்வால், தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் தான் ஒரு சிவபெருமானின் தீவிரமான பக்தை என்று கூறியிருக்கிறார். அதன் காரணமாகவே என் மகனுக்கு சிவபெருமானின் பெயரை சூட்டினேன். அதாவது சிவபெருமானின் மற்றொரு பெயர் நீலகண்டன். அதில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களை தேர்வு செய்து, நீல் என்று என் மகனுக்கு பெயர் சூட்டினேன் என்று தனது மகனின் பெயருக்குள் மறைந்திருக்கும் நீலகண்டனை வெளிச்சம் போட்டுள்ளார் காஜல் அகர்வால்.