ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மலையாளத்தில் மின்னல் முரளி என்கிற படத்தில் இயக்குனராகவும் ‛ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' என்கிற படத்தின் நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் இயக்குனர் பஷில் ஜோசப். இவர் முதன்முதலாக இயக்கிய நகைச்சுவை திரைப்படம் குஞ்சி ராமாயணம். இந்த படத்திற்கு கதை எழுதியவர் கதாசிரியர் தீபு பிரதீப். இந்த நிலையில் தீபு பிரதீப் கதையில் தற்போது உருவாகியுள்ள படம் பத்மினி. இந்தப் படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்க அபர்ணா பாலமுரளி மற்றும் மடோனா செபாஸ்டியன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குனர் சென்னா ஹெக்டே என்பவர் இயக்கியுள்ளார். குஞ்சி ராமாயணம் படம் போல இதுவும் இன்னொரு கதைக்களத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்துடன் உருவாகியுள்ளதாம். இந்த படம் வரும் ஜூலை 7ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது கேரளாவில் கனமழை பெய்து வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை படத்தின் நாயகியான அபர்ணா பாலமுரளி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.