ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

கன்னடத்தில் உருவாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 2022ல் வெளியான ‛காந்தாரா'. ரிஷப் ஷெட்டி இயக்கி, நாயகனாகவும் நடித்தார். நாயகியாக சப்தமி கவுடா நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1' உருவாகி வருகிறது. அதாவது காந்தாரா படத்தின் முந்தைய கதைகளத்தில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சிலமாதங்களாக நடந்து வருகிறது. இப்படம் வரும் அக்., 2ம் தேதி வெளியீடு என ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.
இதன் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி நடக்கவில்லை என்றும், ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாகவும் வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக ரிஷப் ஷெட்டி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛காந்தாரா சாப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி சரியாக செல்கிறது. எங்களை நம்புங்கள், வதந்திகளை நம்பாதீர். சொன்னபடி அக்., 2ல் படம் வெளியாகும்'' என தெரிவித்துள்ளார்.