23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா |
கன்னடத்தில் உருவாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 2022ல் வெளியான ‛காந்தாரா'. ரிஷப் ஷெட்டி இயக்கி, நாயகனாகவும் நடித்தார். நாயகியாக சப்தமி கவுடா நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1' உருவாகி வருகிறது. அதாவது காந்தாரா படத்தின் முந்தைய கதைகளத்தில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சிலமாதங்களாக நடந்து வருகிறது. இப்படம் வரும் அக்., 2ம் தேதி வெளியீடு என ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.
இதன் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி நடக்கவில்லை என்றும், ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாகவும் வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக ரிஷப் ஷெட்டி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛காந்தாரா சாப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி சரியாக செல்கிறது. எங்களை நம்புங்கள், வதந்திகளை நம்பாதீர். சொன்னபடி அக்., 2ல் படம் வெளியாகும்'' என தெரிவித்துள்ளார்.