புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் இயக்கிய தெலுங்கு படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது. 'பாகுபலி' படங்களின் மூலம் பான் இந்தியா டிரெண்ட்டை உருவாக்கினார். 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் ஆஸ்கரின் கதவை தட்டினார். அடுத்து மகேஷ் பாபு நடிப்பில் சூப்பர் ஹீரோ படம் ஒன்றை இயக்க இருக்கிறார். 3 பாகமாக வெளிவர இருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் ஆயிரம் கோடி என்கிறார்கள்.
இந்த நிலையில் ராஜமவுலி ஒரு செல்போன் விளம்பரத்தில் நடித்த செய்தி அண்மையில் வெளியாகி ஆச்சர்யத்தை உண்டாக்கியது. இந்த விளம்பர படத்தில் நடிக்க எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு அந்த நிறுவனம் 30 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விளம்பர படத்தில் நடிக்க மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக ஓர் ஆண்டுகள் பணியாற்றவும் சேர்த்து இந்த சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். இதுதவிர அந்த செல்போன் நிறுவனத்தின் விளம்பர படம் ஒன்றையும் ராஜமவுலி இயக்கித் தர வேண்டும் என்பதும் இந்த சம்பளத்தில் அடங்கும் என்கிறார்கள்.
ராஜமவுலி 'ஆர்ஆர்ஆர்' படம் இயக்க ரூ.100 கோடி சம்பளம் பெற்றார் என்றும், அடுத்து இயக்க இருக்கும் மகேஷ் பாபு படத்திற்கு ரூ.300 கோடி சம்பளம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.