சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
நடிகர் யோகிபாபுவின் கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன. மாவீரன், ஜெயிலர், அயலான் என அடுத்தடுத்து அவரது படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இந்த நிலையில் முதன்முதலாக கன்னட இசையமைப்பாளர் சுராக் என்பவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. பிரபல கன்னட இசையமைப்பாளரும் இயக்குனருமான சாது கோகிலாவின் மகன் தான் இந்த சுராக். ஆனாலும் இந்த படம் தமிழில் தான் உருவாகி வருகிறது. அதன் பின்னர் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட இருக்கிறதாம். சென்னையில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 10 நாட்கள் நடைபெற்று உள்ளது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பில் யோகிபாபு கலந்து கொண்டு நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.