பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சினிமா துறையில் உலகின் தலை சிறந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. பெரும்பாலும் வெளிநாட்டு படங்களுக்கு மட்டுமே சாத்தியமான இந்த விருது இப்போது இந்திய படங்களுக்கும் மெல்ல சாத்தியமாகி வருகிறது. கடந்தாண்டு ‛ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காகஆஸ்கர் விருது பெற்றார் இசையமைப்பாளர் கீரவாணி. அதேப்போன்று ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுடப் கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அதேபோல் இந்த வருடத்திற்கு புதிய உறுப்பினர்களின் பட்டியலை ஆஸ்கர் குழு வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, 2023ம் ஆண்டிற்கான 'ஆஸ்கர் விருதுகள்' தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களுடன் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர், சித்தார்த் ராய் கபூர், சந்திரபோஸ் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழ் சினிமாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.