ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை ராஷ்மிகா மந்தனா இன்றைய தேதியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவர். நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் அளவிற்கு தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது தற்போது பாலிவுட்டிலும் தொடர் வாய்ப்புகளை பெற்று நடித்து வரும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார் ராஷ்மிகா.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து, அந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்கிற பாடலுக்கு வித்தியாசம் நடனமாடி சிறு குழந்தைகள் வரை ரசிகைகளை பெற்றுள்ளார் ராஷ்மிகா.
இந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் நேற்று முதல் கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார் ராஷ்மிகா. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் தான் இணைந்து நடித்து வரும் அனிமல் என்கிற படத்தின் படப்பிடிப்பை ராஷ்மிகா நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.