சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஒரு திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் பிணமாக நடிப்பது மிகவும் அபூர்வமானது. ஒரு நாள் பிணமாக நடித்தால் கூட நடிகர், நடிகைகள் அதற்கொரு பரிகாரம் செய்வார்கள். ஆனால் நடிகை ரோகினி 'தண்டட்டி' படத்தில் 30 நாள் பிணமாக நடித்துள்ளார். இதற்கு முன் நாகேஷ் 'நம்மவர்' படத்தில் பிணமாக நடித்தார். 'ஏலே' படத்தில் சமுத்திரகனி பிணமாக நடித்தார். சமீபத்தில் வெளியான தலைக்கூத்தல் படத்தில் துணை இயக்குனர் ஒருவர் பிணமாக நடித்தார். தற்போது ரோகினி நடித்துள்ளார்.
கிராமத்து மூதாட்டியான ரோகினி மொத்த குடும்பத்தையும் தாங்கி பிடித்தவர். அவர் திடீரென இறந்து விடவே அவர் காதில் அணிந்திருந்த தண்டட்டியை யாரோ திருடிவிடுகிறார்கள். அதை கண்டுபிடிக்க வருகிறார் போலீஸ் ஏட்டு பசுபதி. இதுதான் படத்தின் கதை. இதற்காக பெரும்பாலான காட்சிகளில் பிணமாக நடித்துள்ளார் ரோகினி.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தண்டட்டி படத்தில் தங்கப் பொண்ணு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உண்மையிலேயே அவ்வளவு பெரிய தண்டட்டி அணிந்து நடித்தது சந்தோஷமாக இருந்தது. அந்த ஊரில் ஏராளமான பெண்கள் இந்த தண்டட்டியை அணிந்து உள்ளனர். கதைப்படி நான் இறந்த பிறகு நடைபெறும் பிரச்னைகளைச் சுற்றி காட்சிகள் இருக்கும். நான் பிணமாக நடிப்பதை பற்றி எல்லாம் கவலைப்பட்டதில்லை. தொடர்ந்து இது போன்ற கேரக்டர்கள் அமைந்தால் என்னைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். என்றார்.