நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
விஷால் வெங்கட் இயக்கும் ‛பாம்' என்ற படத்தில் பிணமாக நடித்து இருக்கிறார் காளி வெங்கட். இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் ஹீரோ என்றாலும், பிணமாக இருக்கும் காளி வெங்கட்டை சுற்றியே கதை நகர்கிறதாம். படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படம் குறித்து பேசியுள்ள காளி வெங்கட், ‛‛எவ்வளவு கோடி பணம் இருந்தாலும், யாரும் பிணமாக இருக்க சம்மதிக்க மாட்டார்கள். அப்படி போட்டோ, வீடியோ எடுக்க மாட்டார்கள். அதெல்லாம் ஒரு கலைஞனுக்குதான் கிடைக்கும் பாக்கியம். பாம் படத்தில் பல நாட்கள் பிணமாக நடித்தேன். என்னை சுற்றி மற்றவர்கள் அழுவதை, என்ன நடக்கிறது என்பதை அந்த கோலத்தில் பார்த்தேன்.
ஒரு சில காட்சிகளில் பிணமான என்னை துாக்கி சுமப்பார் ஹீரோ அர்ஜூன் தாஸ். நாம் வெயிட்டாக இ ருக்கிறோம். ஹீரோ கஷ்டப்படுகிறாரே என்று பீல் பண்ணினேன். ஒரு காட்சியில் ஹீரோயின் ஷிவாத்மிகா ராஜசேகர்(இதுதாண்டா போலீஸ் ராஜசேகர் மகள்) என்னை துாக்கி சுமக்க வேண்டும். சில தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த காட்சியை எடுக்கலாமா என்று யோசித்தபோது, இப்படிதானே துாக்க வேண்டும் என்று என்னை அசால்ட்டாக துாக்கிக் கொண்டு நடித்தார். நான் மிரண்டுவிட்டேன்'' என்றார்.
பாம் என்று தலைப்பு வைத்தாலும் இது தீவிரவாத, போலீஸ் கதை இல்லை. வயிறு பிரச்னையால் ஒருவர் போடுகிற 'பாம்' சம்பந்தப்பட்ட, அதாவது, பிணம் பாம் போடுகிற வித்தியாசமான கதை.