ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! |
அருள்நிதிக்கு திருப்பம் தந்த மவுனகுரு, பல விருதுகளை குவித்த மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமார் அடுத்த படத்தை இயக்குகிறார். இதனை டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி தயாரிக்கிறது. கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், தான்யா தவிர ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜி.எம்.சுந்தர், ரம்யா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜி.ஆர்.என் சிவா ஓளிப்பதிவு செய்கிறார், தமன் இசை அமைக்கிறார். தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் அநீதி படத்தில் நாயகனாக நடிக்கும் அர்ஜூன் தாஸின் அடுத்த படம் இது. தான்யா தற்போது அகிலன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து மாயோன் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.