‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான படம் மகாமுனி. ஆர்யா 2 வேடங்களில் நடித்திருந்த இந்தபடத்தில் இந்துஜா, மகிமா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர் இந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், பல விருதுகளை அள்ளியது குறிப்பாக ஐரோப்பிய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட 700 படங்களுடன் போட்டியிட்டு, இறுதி பட்டியலில் இடம் பிடித்தது.
அந்தவகையில் ஆர்யாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்த இந்தப்படத்தை அடுத்து, மீண்டும் சாந்தகுமாருடன் இணைந்து பணியாற்ற உள்ளாராம் ஆர்யா. இதுபற்றி ஆர்யா தரப்பில் கூறும்போது, மகாமுனி படம் ரிலீசான சமயத்திலேயே சாந்தகுமாருடன் இணைந்து இன்னொரு படம் பணியாற்றுவது என்பது, ஏற்கனவே எடுத்த முடிவு தான் என்று கூறுகிறார்கள்.