300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்கிறார். அங்கு மருத்துவ சிகிச்சை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக, சிறப்பு தனி விமானத்தில் செல்ல ஏற்பாடு நடக்கிறது.
இந்த தனி விமானத்தில், 14 பேர் பயணம் செய்யலாம். தான் மட்டுமல்லாமல், குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். இந்த தனி சிறப்பு விமானத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக இரண்டு மத்திய அமைச்சர்களுடன் பேசியுள்ளார் ரஜினி.
இந்த இரண்டு அமைச்சர்களில் ஒருவர் தமிழர். அவரிடம் தமிழிலேயே பேசியுள்ளார் ரஜினி. இதையடுத்து, தனி விமானத்திற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது.