ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

சினிமா உலகத்திற்கு சற்றும் தொடர்பில்லாத டாக்டர் காந்தாராஜ் என்பவர் நடிகர் நடிகைகளின் அந்தரங்கமான விஷயங்களை யு-டியூப் சேனல்களில் பேசி வந்தார். குறிப்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகைகள் பலர் விபச்சார தொழில் செய்வதாகவும் கூறி அவர்கள் யார் யார் என்கிற விவரத்தையும் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காந்தராஜ் மீது நடிகையும், நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவருமான ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகைகள் குறித்து அவதூறாக பேசி வரும் காந்தா ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது பேச்சுகளை யு-டியூப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தனது புகார் மனுவில் ரோகிணி கூறியுள்ளார்.