ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் |
சினிமா உலகத்திற்கு சற்றும் தொடர்பில்லாத டாக்டர் காந்தாராஜ் என்பவர் நடிகர் நடிகைகளின் அந்தரங்கமான விஷயங்களை யு-டியூப் சேனல்களில் பேசி வந்தார். குறிப்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகைகள் பலர் விபச்சார தொழில் செய்வதாகவும் கூறி அவர்கள் யார் யார் என்கிற விவரத்தையும் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காந்தராஜ் மீது நடிகையும், நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவருமான ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகைகள் குறித்து அவதூறாக பேசி வரும் காந்தா ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது பேச்சுகளை யு-டியூப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தனது புகார் மனுவில் ரோகிணி கூறியுள்ளார்.