300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
சினிமா உலகத்திற்கு சற்றும் தொடர்பில்லாத டாக்டர் காந்தாராஜ் என்பவர் நடிகர் நடிகைகளின் அந்தரங்கமான விஷயங்களை யு-டியூப் சேனல்களில் பேசி வந்தார். குறிப்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகைகள் பலர் விபச்சார தொழில் செய்வதாகவும் கூறி அவர்கள் யார் யார் என்கிற விவரத்தையும் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காந்தராஜ் மீது நடிகையும், நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவருமான ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகைகள் குறித்து அவதூறாக பேசி வரும் காந்தா ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது பேச்சுகளை யு-டியூப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தனது புகார் மனுவில் ரோகிணி கூறியுள்ளார்.