என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ஆதி நடித்த மரகத நாணயம் என்ற படத்தை இயக்கியவர் ஏஆர்கே சரவணன். இவர் தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வீரன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அவருடன் வினய் ராய், ஆதிரா ராஜ், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர், டிரைலர் சமீபத்தில் வெளியானது. வருகிற ஜூன் இரண்டாம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார் ஏஆர்கே சரவணன். அது குறித்து அவர் கூறுகையில், நான் இயக்கிய மரகத நாணயம் படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டிய தனுஷ் தனக்கும் ஒரு கதை தயார் பண்ணுமாறு அப்போதே கூறியிருந்தார். வீரன் படம் திரைக்கு வந்ததும் தனுஷை சந்தித்து சில கதைகளை அவரிடத்தில் சொல்லி அதில் அவருக்கு பிடித்தமான கதையை தேர்வு செய்து அந்த படத்தை இயக்குவேன் என்கிறார்.