மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஆதி நடித்த மரகத நாணயம் என்ற படத்தை இயக்கியவர் ஏஆர்கே சரவணன். இவர் தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வீரன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அவருடன் வினய் ராய், ஆதிரா ராஜ், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர், டிரைலர் சமீபத்தில் வெளியானது. வருகிற ஜூன் இரண்டாம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார் ஏஆர்கே சரவணன். அது குறித்து அவர் கூறுகையில், நான் இயக்கிய மரகத நாணயம் படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டிய தனுஷ் தனக்கும் ஒரு கதை தயார் பண்ணுமாறு அப்போதே கூறியிருந்தார். வீரன் படம் திரைக்கு வந்ததும் தனுஷை சந்தித்து சில கதைகளை அவரிடத்தில் சொல்லி அதில் அவருக்கு பிடித்தமான கதையை தேர்வு செய்து அந்த படத்தை இயக்குவேன் என்கிறார்.