ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான பிச்சைக்காரன் என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சசி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கோடீஸ்வரனாக இருக்கும் விஜய் ஆண்டனி சில காரணங்களால் ஒரு மாத காலத்திற்கு பிச்சைக்காரனாக வாழ வேண்டிய சூழல் ஏற்படும். உணர்வுபூர்வமாக உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக பிச்சைக்காரன்-2 என்கிற படத்தை தானே இயக்கி நடித்து கடந்த வாரம் வெளியிட்டார் விஜய் ஆண்டனி.
முதல் பாக அளவுக்கு இல்லாவிட்டாலும் இந்த இரண்டாவது பாகத்திற்கு கலவையான விமர்சனமும் டீசன்டான வசூலும் கிடைத்து வருகின்றன. குறிப்பாக பிச்சைக்காரன் படம் ஆந்திராவில் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த பிச்சைக்காரன்-2 படமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் விஜய் ஆண்டனி ராஜமுந்திரிக்கும் சென்றுள்ளார். அப்போது அங்கே சாலையில் அமர்ந்திருந்த சில பிச்சைக்காரர்களை பார்த்து அவர்களை அங்கிருந்த ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அமர வைத்து விருந்தளித்து மகிழ்வித்துள்ளார். அந்த சமயத்தில் அவரே தன் கைப்பட அவர்களுக்கு விருந்து பரிமாறி உபசரித்துள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த மனிதநேய செயல் சோசியல் மீடியாவில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.