ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! | என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு | பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம் | 'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை |
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான பிச்சைக்காரன் என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சசி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கோடீஸ்வரனாக இருக்கும் விஜய் ஆண்டனி சில காரணங்களால் ஒரு மாத காலத்திற்கு பிச்சைக்காரனாக வாழ வேண்டிய சூழல் ஏற்படும். உணர்வுபூர்வமாக உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக பிச்சைக்காரன்-2 என்கிற படத்தை தானே இயக்கி நடித்து கடந்த வாரம் வெளியிட்டார் விஜய் ஆண்டனி.
முதல் பாக அளவுக்கு இல்லாவிட்டாலும் இந்த இரண்டாவது பாகத்திற்கு கலவையான விமர்சனமும் டீசன்டான வசூலும் கிடைத்து வருகின்றன. குறிப்பாக பிச்சைக்காரன் படம் ஆந்திராவில் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த பிச்சைக்காரன்-2 படமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் விஜய் ஆண்டனி ராஜமுந்திரிக்கும் சென்றுள்ளார். அப்போது அங்கே சாலையில் அமர்ந்திருந்த சில பிச்சைக்காரர்களை பார்த்து அவர்களை அங்கிருந்த ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அமர வைத்து விருந்தளித்து மகிழ்வித்துள்ளார். அந்த சமயத்தில் அவரே தன் கைப்பட அவர்களுக்கு விருந்து பரிமாறி உபசரித்துள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த மனிதநேய செயல் சோசியல் மீடியாவில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.