புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சுரேஷ் கோபி. மோகன்லால், மம்முட்டிக்கு இணையாக பரபரப்பாக நடித்து வந்த இவர் அரசியலில் களம் இறங்கியதால், சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் முன்பு போல பரபரப்பாக பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது கருடன் என்கிற படத்தில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி.
இந்த நிலையில் சுரேஷ் கோபிக்கு உடல் நலக்குறைவு என்பது போல சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவ ஆரம்பித்தது. இந்த செய்தி சுரேஷ் கோபியின் பார்வைக்கு வந்ததும் உடனடியாக இதுகுறித்த உண்மையை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக, “நான் நலமாக இருக்கிறேன். கடவுளின் அருளால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது ஆலுவாவில் உள்ள யு.சி கல்லூரியில் நடந்துவரும் கருடன் பட படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறேன். இந்த செய்தி வந்ததும் இதுகுறித்து அக்கறையுடன் என்னை விசாரித்த அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார்.