விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான சுதீப், தமிழில் 'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர் விஜய் நடித்த 'புலி' படத்திலும் வில்லனாக நடித்தார். பின்னர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த 'முடிஞ்சா இவன புடி' படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படம் வெளிவந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
சுதீப் நடித்து கன்னடத்தில் தயாரான 'விக்ராந்த் ரோணா' கடந்த வருடம் பான் இந்தியா படமாக வெளிவந்தது. அடுத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் தாணு தயாரிக்க உள்ள படத்தில் சுதீப் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இது பற்றிய அறிமுக வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டனர். சுதீப்பின் 46வது படமாக இது உருவாக உள்ளது. விரைவில் படத்தின் டீசருடன் வருவதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்கள். இப்படமும் ஒரு பான் இந்தியா படமாகத்தான் வெளிவரும் எனத் தெரிகிறது.
கடந்தாண்டு செல்வராகவன் இயக்க தனுஷ் நடித்த 'நானே வருவேன்' படத்திற்குப் பிறகு தாணு தயாரிக்கும் படம் இது. அவர் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள 'வாடி வாசல்' படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது இன்னமும் தெரியாத நிலையில் உள்ளது. வெற்றிமாறன் இயக்க சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் அது.