புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்குத் திரையுலகத்தின் 'என்றும் மார்க்கண்டேயன்' என்றழைக்கப்படுபவர் நாகார்ஜுனா. எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். இருந்தாலும் அவரால் தற்போது பெரிய வெற்றிகளைக் கொடுக்க முடியவில்லை. அவரது காலத்து ஹீரோக்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா கூட இப்போதும் 100 கோடி படங்களைக் கொடுத்து வருகிறார்கள்.
நாகார்ஜுனா நடித்து கடைசியாக கடந்த வருடம் வெளிவந்த 'த கோஸ்ட்' படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதற்கடுத்து அவரது இளைய மகன் அகில் நடித்து கடந்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி வெளிவந்த 'ஏஜன்ட்' படம் படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கடுத்து அவரது மூத்த மகன் நாக சைதன்யா நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த 'கஸ்டடி' படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்து அந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது.
கதைத் தேர்வுகளில் அவர்கள் சரிவர கவனம் செலுத்தவில்லை என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். கடும் போட்டி நிலவி வரும் இந்தக் காலத்தில் கதையும், கதாபாத்திரங்களும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களது கடைசி படங்களின் தோல்வி அவர்களுக்கு உணர்த்தியிருக்கும். எனவே, தங்களது அடுத்த படக் கதைத் தேர்வுகளில் அவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்பது உறுதி. சினிமாவில் வெற்றியும், தோல்வியும் யாருக்கு வேண்டுமானால் வரலாம். ஆனால், தோல்வியிலிருந்து மீள்வதுதான் முக்கியம்.