ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம், 'கேப்டன் மில்லர்'. இதில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். குற்றாலம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் நடைபெற்று வருகிறது. பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட அந்த கிராமத்தில் எந்த அனுமதியும் பெறாமல் குண்டு வெடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டதாக அரிட்டாபட்டி பாதுகாப்பு சங்கம் சார்பில் புகார் அளித்துள்ளனர். இதற்கு முன்பு தென்காசியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கும் விதமாக குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக படப்பிடிப்பை கலெக்டர் நிறுத்தினர். இப்போது மீண்டும் அதுபோன்று ஒரு சர்ச்சையில் கேப்டன் மில்லர் படக்குழு சிக்கி உள்ளனர்.