லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

2025ம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஒரே நாளில் 10 படங்கள் இன்றைய தினம் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே அவற்றில் சில படங்கள் இன்று வெளியாகவில்லை.
'அந்த 7 நாட்கள், தாவுத்,' ஆகிய இரண்டு படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதர்வா நடித்த 'தணல்' படத்தின் தயாரிப்பாளருக்கும், பைனான்சியருக்கும் இடையே உள்ள நிலுவைத் தொகை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் அதன் நிலவரம் தெரிய வரும். அதன் பின்னரே படம் வெளியாகும்.
அதனால், இன்று, “பிளாக்மெயில், பாம், காயல், குமாரசம்பவம், மதுரை 16, உருட்டு உருட்டு, யோலா” ஆகிய 7 படங்கள் வெளியாகி உள்ளன. ஒரே நாளில் இத்தனை படங்கள் என்பதாலும், கடந்த வாரம் வெளிவந்த 'மதராஸி' படம் இரண்டாவது வாரத்தில் தொடர்வதாலும் இந்தப் படங்களுக்குக் குறைவான தியேட்டர்களே கிடைத்துள்ளன.