பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். இருந்தாலும் அவர் காப்பியடிக்கிறார் என்று அடிக்கடி ஒரு சர்ச்சை கிளம்பும். அவரது இசையில், ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' பாடல் நேற்று மாலை வெளியானது. அனிருத் இசையமைத்து வரும் தெலுங்குப் படமான 'தேவரா' படத்தின் 'தாவூதி' படப் பாடல் போலவே அந்தப் பாடல் உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் 'டிரோல்' செய்து வருகிறார்கள்.
ஏற்கெனவே 'தேவரா' படத்தின் முதல் சிங்கிளான 'பியர்' பாடல் 'லியோ' படத்தின் 'படாஸ்' பாடலின் மறு உருவாக்கமாகவும், 'சுட்டாமலே' பாடல், சிங்கள ஆல்பமான 'மணிக்கே மஹே ஹித்தே' பாடலின் காப்பி என்றும் சர்ச்சை கிளம்பியது.
நேற்று வெளியான 'மனசிலாயோ' பாடல் கூட மலையாளப் படமான 'அஜகஜாந்தரம்' படத்தில் இடம் பெற்ற 'ஒல்லுல்லெரு' என்ற பாடலின் காப்பியாக உள்ளது என்று புதிய சர்ச்சை உருவாகி உள்ளது. இந்தப் பாடல் யு டியூப் தளத்தில் 128 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ரஜினி படத்திற்காக உருவான பாடலை ஜூனியர் என்டிஆர் படப் பாடலுக்காக அதே டியுனில், அதுவும் காப்பி டியூனில் போட்டது சரியா… என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.