திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். இருந்தாலும் அவர் காப்பியடிக்கிறார் என்று அடிக்கடி ஒரு சர்ச்சை கிளம்பும். அவரது இசையில், ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' பாடல் நேற்று மாலை வெளியானது. அனிருத் இசையமைத்து வரும் தெலுங்குப் படமான 'தேவரா' படத்தின் 'தாவூதி' படப் பாடல் போலவே அந்தப் பாடல் உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் 'டிரோல்' செய்து வருகிறார்கள்.
ஏற்கெனவே 'தேவரா' படத்தின் முதல் சிங்கிளான 'பியர்' பாடல் 'லியோ' படத்தின் 'படாஸ்' பாடலின் மறு உருவாக்கமாகவும், 'சுட்டாமலே' பாடல், சிங்கள ஆல்பமான 'மணிக்கே மஹே ஹித்தே' பாடலின் காப்பி என்றும் சர்ச்சை கிளம்பியது.
நேற்று வெளியான 'மனசிலாயோ' பாடல் கூட மலையாளப் படமான 'அஜகஜாந்தரம்' படத்தில் இடம் பெற்ற 'ஒல்லுல்லெரு' என்ற பாடலின் காப்பியாக உள்ளது என்று புதிய சர்ச்சை உருவாகி உள்ளது. இந்தப் பாடல் யு டியூப் தளத்தில் 128 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ரஜினி படத்திற்காக உருவான பாடலை ஜூனியர் என்டிஆர் படப் பாடலுக்காக அதே டியுனில், அதுவும் காப்பி டியூனில் போட்டது சரியா… என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.