அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் |

'குபேரா'வுக்குபின் தனுஷ் நடிப்பில் 'இட்லிகடை' ரிலீஸ் ஆக உள்ளது. அக்டோபர் 1ல் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், செப்டம்பர் 14ல் சென்னையில் பிரமாண்ட பாடல் வெளியீட்டு விழா நடக்கப்போகிறது. இப்போது 'போர்த்தொழில்' விக்னேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
அடுத்து 'அமரன்' தேசிங்கு பெரியசாமி படத்தில் நடிக்கப்போகிறார். அதற்கடுத்து தெலுங்கில் 'விராட பருவம்' படத்தை இயக்கிய வேணு இயக்கத்தில் நடிக்கப்போகிறோம். ராம்சரண், சாய்பல்லவி நடித்த அந்த படம் தெலுங்கில் பேசப்பட்டது. அவர் சொன்ன சீரியஸ் கதை பிடித்து இருந்ததால் அவருக்கு கால்ஷீட் கொடுத்து இருக்கிறாராம். தமிழை போல் தனுசுக்கு தெலுங்கு மார்க்கெட் உருவாகி வருகிறது. அதனால், குபேராவுக்குபின் மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிக்கப்போகிறாராம். அதேபோல் காமெடி, ஜாலியான கதைகளை தவிர்த்து அழுத்தமான கதைகளில் நடிக்கவே ஆர்வமாக இருக்கிறாராம்.