இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
வீஜே, ஆர்ஜே, வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட், ஸ்கிரிப்ட் ரைட்டர் என பன்முக திறமைகொண்ட விமல்குமார் தற்போது சீரியலிலும் ரோலில் கலக்கி வருகிறார். அவரது நடிப்பை பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்த ஆரம்ப காலகட்டங்களில் அவர் சந்தித்த அனுபவங்களை அண்மையில் பகிர்ந்துள்ளார்.
ஒருமுறை விமல் குமார் ஆடிஷனுக்காக சென்ற இடத்தில் அவரிடம் ஒரு போட்டோவை காண்பித்து அதிலிருப்பது போல் முடி வெட்டி வர சொல்லியுள்ளனர். விமலும் முடிவெட்டி சென்றிருக்கிறார். மறுநாளும் மீண்டும் முடி வெட்டி வர சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். இதுபோல் மூன்று நாள் அவரை அலைக்கழித்துள்ளனர். நான்காவது நாள் விமல் அங்கு சென்று பார்த்தபோது அந்த குழுவானது இடத்தை காலி செய்து சென்றுவிட்டனர். இதனால் மனமுடைந்த விமல்குமார் ரூமுக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு படுத்துக்கொண்டாராம்.
அதுபோல் மீடியாவில் பயணிப்பதால் சில இயக்குநர்களும் விமல்குமாருடன் நட்பாக பழகி வருகின்றனர். ஆனாலும், வாய்ப்பு என்று கேட்கும் போது கேரக்டர் டிமாண்ட் பண்ண வேண்டும், வாய்ப்பில்லை என்று வெளிப்படையாகவே மறுத்துவிடுவார்களாம். இதுபோல் பல கவலையான இரவுகள் என் வாழ்க்கையில் இருக்கிறது. அதெல்லாம் என் டைரி பக்கங்களில் எழுதி வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
தற்போது எதிர்நீச்சல் தொடரில் கரிகாலன் ரோலில் விமல்குமார் நடித்து, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார்.