32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடர் சூப்பர் ஹிட்டானது. அந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் வில்லன் கதாபாத்திரத்தில் ஆதியாக நடித்த அஜய் கபூரும் ஒருவர் சொல்லலாம். இதனை தொடர்ந்து எதிர்நீச்சல் தொடரிலும் மிகவும் வலுவான வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார் திருச்செல்வம். ஆனால், அந்த தொடரில் தவிர்க்க முடியாத காரணங்களால் சீக்கிரமே முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், எதிர்நீச்சல் சீசன் 2 அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையில் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பல புதிய கதாபாத்திரங்களும், நடிகர்களும் அறிமுகமாகியுள்ள இந்த தொடரில் கோலங்கள் ஆதியும் நடிக்க இருக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு காரணம் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் பிரியதர்ஷினி அஜய் கபூருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எனவே, ஆதி-திருச்செல்வம் காம்போ எதிர்நீச்சல் 2விலும் தொடருமா? என பல ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.