கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் அமோக வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் தொடர் பல காரணங்களுக்கிடையே சிக்கி விரைவிலேயே முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் ஹீரோயினாக ஜனனி என்ற வேடத்தில் நடித்த மதுமிதாவிற்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் மதுமிதாவை மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்க சொல்லி கேட்க, தற்போது ரசிகர்களின் ஆசை நிறைவேறும் வகையில் மதுமிதாவும் தமிழிலேயே புதிய சீரியலில் கமிட்டாகியிருக்கிறாராம். ஜீ தமிழில் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு சீரியல்களுக்கு எண்ட் கார்டு போட்டுவிட்ட நிலையில் புதிய சீரியல்கள் அந்த இடத்தை பிடிக்க வருகின்றன. அதில் ஒரு சீரியலில் தான் மதுமிதா என்ட்ரி கொடுத்திருப்பதாக சின்னத்திரை வட்டாராங்களில் செய்திகள் பரவி வருகிறது.