300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
யு-டியூப் மற்றும் சிறிய சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த விமல் குமாரின் நடிப்பு கனவை நனவாக்கியது எதிர்நீச்சல் தொடர் தான். அவரும் அந்த தொடரில் கரிகாலன் என்கிற கதாபாத்திரத்தில் மிகவும் சூப்பராக பெர்பார்மன்ஸ் செய்து மக்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சின்னத்திரை விருதுகள் நிகழ்வில் விமல் குமாரை கவுரவித்துள்ளனர். அப்போது மேடையில் பேசிய விமல் குமார், 'வாசிப்பு தான் விமல் குமாரை கரிகாலனாக்கியது. வாசிப்பு தான் என் குறிக்கோளை அடைய உதவியது. ஜெய மோகன், தால்ஸ்த்தாய் எழுத்தாளர்களின் கதாபாத்திரங்கள் என்னை பல இரவுகள் தூங்க விடாமல் செய்தது' என்று கூறியுள்ளார்.