காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
சின்னத்திரை நடிகர் சதீஷ் விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி தொடரில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். ஹீரோ, வில்லன், காமெடி என ஒட்டுமொத்த உருவமாக கோபி ரோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் கச்சிதமாக பெர்பார்மன்ஸ் செய்து வரும் சதீஷுக்கு ரசிகர் பட்டாளமும் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன் சதீஷ், பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் வருத்தமடைந்த ரசிகர்கள் சதீஷை மீண்டும் கோபி கதாபாத்திரத்தில் தொடரும்படி வேண்டுகோள் வைத்து வந்தனர்.
சக நடிகரான விஷாலும் 'என் அப்பாவை போகவிடமாட்டேன்' என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது வீடியோ வெளியிட்டுள்ள சதீஷ், 'நான் உணர்ச்சிவசப்பட்டு விலகுவதாக கூறிவிட்டேன். எனக்குள் பெர்சனலாக இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டது. இனி நான் கோபியாக பாக்கியலெட்சுமி சீரியலில் தொடர்ந்து நடிப்பேன்' என்று கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.