சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
மலையாள நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி நடிப்பில் மலையாளத்தில் உருவாகி இருக்கும் படம் ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா). இந்த படம் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியாக இருந்த நிலையில் சென்சார் தரப்பில் இருந்து இந்த படத்தின் டைட்டிலில் இடம் பெற்று இருக்கும் ஜானகி என்கிற பெயரை நீக்குமாறு வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டது. இதனால் சென்சார் சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. மறு தணிக்கை செய்ய ரிவைஸிங் கமிட்டிக்கு இந்த படம் அனுப்பப்பட்டும் இதே காரணம் சொல்லி சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல தயாரிப்பாளர்கள் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தற்போது இதன் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என் நகரேஷ், “ஜானகி என்கிற பெயரை எதற்காக நீக்க வேண்டும் என்கிறீர்கள்? ஏற்கனவே இதே போன்ற பெயர்களில் படங்கள் வந்திருக்கின்றது. இத்தனைக்கும் அது ஒன்றும் குற்றவாளிக்காக வைக்கப்பட்ட பெயர் இல்லையே. ? மீதிக்காக போராடும் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வைக்கப்பட்ட செயல்தானே ? சினிமாவை அடக்கி ஆள நினைக்கிறீர்களா?” என சென்சார் வாரியத்திற்கு நீதிபதி நாகராஜன் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் வரும் சனிக்கிழமை இந்த படத்தின் பிரத்யேக காட்சியை நீதிபதி என் நகரேஷ் பார்க்க இருக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு அதன்பிறகு இந்த வழக்கில் தனது தீர்ப்பை அவர் கூற இருப்பதாக சொல்லப்படுகிறது.