சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தங்க மீன்கள் , குற்றம் கடிதல், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, தரமணி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஜே. சதீஷ் குமார். 'தரமணி' படத்தில் நடிகராக அறிமுகமாகி, கபடதாரி, பிரெண்ட்ஷிப், அநீதி, வாழை உள்பட பல படங்களில் நடித்தார்.
இந்தநிலையில் அவர் இயக்குனராக மாறி இயக்கிய 'பயர் 'என்ற படம் கடந்த பிப்ரவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படத்தின் 50வது நாள் விழாவை .சதீஷ் குமார் கொண்டாடினார். விழாவில் இயக்குனர் ராம் கலந்து கொண்டு படத்தில் பணியாற்றியவர்களுக்கு கேடயம் வழங்கினார்.
சதீஷ்குமார் கூறும்போது "இந்த ஆண்டு சுமார் 80 படங்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் 'டிராகன்', 'குடும்பஸ்தன்' உள்ளிட்ட வெகு சில திரைப்படங்களே லாபத்தை ஈட்டியுள்ளன. 'பயர்' வெற்றியை ஈட்டியுள்ளது கதையையும் திறமைகளையும் மட்டுமே நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஊட்டி உள்ளது. நல்ல உள்ளடக்கத்தை தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஏற்பார்கள் என்பதற்கு 'பயர்' வெற்றியே சாட்சி. தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து, இயக்குவதோடு மட்டுமில்லாமல், சவாலான வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.