சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பிரபல பாலிவுட் முன்னாள் நடிகை சங்கீதா பிஜ்லானி. ஒருகாலத்தில் நடிகர் சல்மான்கான் உடன் இணைந்து காதல் கிசுகிசுகளில் சிக்கிய இவர், பின்னர் கிரிக்கெட் வீரர் அசாருதீனை திருமணம் செய்து கொண்டு 15 வருடங்கள் திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்றார்.
இந்த நிலையில் புனே அருகில் பாவனா டேம் அருகில் இவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கடந்த ஜூலை மாதம் சில மர்ம நபர்கள் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தையும் தொலைக்காட்சி உள்ளிட்ட சில பொருட்களையும் எடுத்து சென்றனர். இதுகுறித்து அப்போது காவல்துறையில் புகார் அளித்திருந்தார் சங்கீதா பிஜ்லானி.
ஆனால் கடந்த மூன்று மாதங்களாக இந்த வழக்கில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததாலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததாலும் சமீபத்தில் உயர் போலீஸ் அதிகாரியை சந்தித்து தன்னுடைய புகார் எந்த நிலையில் என்பது குறித்து விசாரித்து அறிந்துள்ளார். அது மட்டுமல்ல கிட்டதட்ட 20 வருடங்களாக தான் அந்த பகுதியில் வசித்து வருவதாகவும் தற்போது கடந்த மூன்று மாதங்களாகவே தனக்கு அங்கே வசிப்பதற்கு ஏதோ அச்சுறுத்தல் இருப்பது போல தோன்றுவதாகவும் கூறி தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி தேவைப்படுவதாக கூறி அதற்கான உரிமத்திற்கும் விண்ணப்பித்துள்ளாராம் சங்கீதா பிஜ்லானி.