சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நடன நிகழ்ச்சிகளுக்காக வந்தவர்கள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள். பின்னர் திரைப்படங்களில் நடனமாடினார்கள். சில நடன காட்சிகள் கதையோடு இணைந்து இருக்கும், சில காட்சிகள் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் கூடுதல் இணைப்பாக இருக்கும். அப்படி கூடுதல் இணைப்பாக 'போஜன்' என்ற படத்தில் 'வள்ளி திருமணம்' என்ற நாட்டிய நாடகம் சேர்க்கப்பட்டது. இந்த நாட்டிய நாடகம் அந்த படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.
படத்தை திரும்ப திரும்ப பார்த்த ரசிகர்கள். லலிதா பத்மினியின் நாட்டிய நாடகம் முடிந்த பிறகு தியேட்டரை விட்டு வெளியேறிய சம்பவங்களும் உண்டு. இந்த நாட்டிய நாடகத்திற்கு அன்றைய பிரபல டான்ஸ் மாஸ்டரான தாரா சவுத்ரி நடனம் அமைத்திருந்தார். எல்.எஸ்.ராமசந்திரன் இயக்கி இருந்தார். படத்தில் விஷூவல் எபெக்ட் காட்சிகளை மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் இயக்கி இருந்தார். ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார். பி.எஸ்.கோவிந்தன் நாயகியாகவும், எஸ்.வரலட்சுமி நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.
லலிதா - பத்மினியின் 'வள்ளி திருமணம்' நடனம் இடம்பெற்ற படம் என்றே விளம்பரமும் செய்தார்கள். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு லலிதா மலையாளத்திலும், பத்மினி தமிழிலும் ஹீரோயின் ஆனார்கள்.