சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தை இயக்கிய செல்வராகவன், அதன் பிறகு பீஸ்ட், சாணிக்காயுதம், பகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக ஏற்கனவே தான் இயக்கிய 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
சோசியல் மீடியாவில் அவ்வப்போது தத்துவங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் செல்வராகவன், தற்போது ஒரு ரசிகர் டுவிட்டரில் கேட்ட கேள்விக்கு கொடுத்துள்ள பதில் கவனம் பெற்று வருகிறது. அதாவது, விவேக் ஒரு காமெடியில் சொல்லுவார். இயக்குனர் ஒவ்வொரு பிரேமையும் செதுக்கி இருக்கார். அப்படி ஒரு படம் இது. அப்படி ஒரு இயக்குனர் செல்வராகவன். அது ஒரு காலம் என்று பதிவிட்டு, காதல் கொண்டேன் படத்தின் பெயரை குறிப்பிட்டுளளார்.
ஆனால் இந்த பதிவில் செதுக்கி இருக்கிறார் என்ற வார்த்தையை செத்துக்கிருக்கார் என்று தவறுதலாக அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அதற்கு பதிலளித்து உள்ள செல்வராகவன், ஏன் நண்பா, நான் இன்னும் சாகவில்லை அல்லது ஓய்வையும் அறிவிக்கவில்லை. தற்போது எனக்காக சில நேரங்களை செலவழித்து வருகிறேன். விரைவில் திரும்பி வருவேன் என்று அவருக்கு டுவிட்டரில் பதில் கொடுத்துள்ளார் .