படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
இயக்குனரான செல்வராகன் தற்போது பல படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பின் ‛7ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இதில் ரவி கிருஷ்ணா மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகியோர் நடிக்கின்றனர்.
செல்வராகவன் அவ்வப்போது தத்துவார்த்தமாக பேசி டுவீட் போடுவார். சில சமயங்களில் வீடியோவும் வெளியிடுவார். இப்போது இவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛நீங்கள் உங்கள் லட்சியத்தை அடைய நினைப்பது நல்லது. அதை ஏன் ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்க வேண்டும். என்ன செய்ய போறீங்கனு யாரிடமும் சொல்லாதீங்க. அந்த காரியம் நிறைவேறாது. நீங்கள் பிறரிடமும் சொல்லும்போது அவர்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கணும் என யாரும் நினைப்பதில்லை. யாரிடமும் உதவி கேட்காதீங்க. ஒன்றரை அணாவிற்கு உதவி செய்துவிட்டு ஆயிரம் கோடிக்கு பேசுவாங்க. அதை அவர்கள் வாழ்நாள் முழுக்க சொல்லி காட்டுவார்கள்'' என்கிறார்.